தமிழகத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களுக்கு கணக்கில் வராத கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 2-ம் தேதி முதல் 3 நாட்கள் சோதனை நடத்தினர். பிரபல பைனாஸ்சியராக உள்ள அன்புச்செழியன், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர் பிரபு ஆகியோருக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்..
சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது..சென்னை, மதுரை, கோவை, வேலூரில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது..
இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியர்ன் உள்ளிட்டோரின் இடங்களில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.. கணக்கில் வராத ரூ.26 கோடி ரொக்கம், ரூ. 3 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. மேலும் அன்புச்செழியன் உள்ளிட்ட ரூ.200 கோடி வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது..