fbpx

“மனுஷன் பாக்குற படமா அது.”? அனிமல் திரைப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சர்ச்சை கருத்து.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்குபவர் சந்திப் ரெட்டி வங்கா. இவரது இயக்கத்தில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அனிமல் என்ற பான் இந்தியா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது

இந்தத் திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா, மந்தானா மற்றும் பாபி தியோல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகவும் வன்முறை நிறைந்த காட்சிகளும் ஆபாச காட்சிகளும் அதிகமாக இடம்பெற்று இருப்பதாக பலரும் இந்த திரைப்படத்தை விமர்சனம் செய்தனர். ஆனாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது .

சமீபத்தில் இந்த திரைப்படம் ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததாகவும் செய்திகள் வெளியாகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் இந்தத் திரைப்படத்தை மோசமாக விமர்சித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருப்பது திரை உலக வட்டாரங்களில் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்திருந்த இந்த திரைப்படத்தை தயாரித்தவர் வினோத் குமார். இவர் அனிமல் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது சமூக வலைதள பக்கமான எக்ஸில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதில் இந்த திரைப்படத்தை மனிதர்கள் பார்க்க மாட்டார்கள் மிருகங்கள் மட்டும்தான் பார்க்கும் என கடுமையாக பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருவதோடு சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

”எட்டி மிதிப்பேன்.. ரெண்டும் தனித்தனியாக போய்டும்”..!! தொகுப்பாளினியிடம் கண்டபடி பேசிய பயில்வான்..!!

Mon Dec 11 , 2023
சினிமா கலைஞர்களின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விஷயங்களை பற்றி இணையத்தில் பேசி வைரலாகி வருபவர் பயில்வான் ரங்கநாதன். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக்கொடுத்து பல விசயங்களை அவதூறான வார்த்தையில் பேசி வருகிறார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பயில்வான் ரங்கநாதன், ”தொகுப்பாளினி ஒருவரை படுகேவலமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். பயில்வான் என்ற பெயர் எனக்கு எம்ஜிஆர்-ஆல் தான் வந்தது. செக்யூரிட்டியாக வேலை பார்த்த போது […]

You May Like