fbpx

விவசாயிகளே..!! இலவச மும்முனை மின்சாரம்..!! நேரம் குறித்து புதிய அறிவிப்பு வெளியீடு..!!

தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அரசால் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்சாரம் வழங்கப்படும் நேரம் தொடர்பாக மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் குரூப் 1, குரூப் 2 என இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது. டெல்டா பகுதிகளில் குரூப் 1, குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரையும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9.30 மணியில் இருந்து ம‌திய‌ம் 3.30 மணி வரைக்கும் இரவு நேரத்தில் 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல்..!! கட்சி நிர்வாகிகளுக்கு அடி உதை..!! போரூரில் பரபரப்பு

Mon Mar 6 , 2023
அருந்ததியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை ஆதித்தமிழர் கட்சி அமைப்பின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று 50க்கும் மேற்பட்ட ஆதி தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்கட்சி கொடிகளை ஏந்தி கொண்டு ஊர்வலமாக வந்தவர்களை ஆற்காடு சாலையில் போரூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், தடுப்பையும் மீறி நுழைந்த […]
நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல்..!! கட்சி நிர்வாகிகளுக்கு அடி உதை..!! போரூரில் பரபரப்பு

You May Like