நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை வருடத்தில் 3 தவணைகளாக ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 14-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர். 13-வது தவணை பிப்ரவரி 27ஆம் தேதி விவசாயிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில், பலருக்கும் நிதி உதவி கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளன. இந்நிலையில், அடுத்த தவணை உங்களுக்கு கிடைக்குமா இல்லையா என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
- முதலில் பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில், beneficiary status என்பதை கிளிக் செய்து உங்கள் பதிவு எண் அல்லது திட்டத்துடன் இணைக்கப்பட்ட 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
- பின்னர், திரையில் தோன்றும் கேப்சா குறியீட்டை உள்ளிட்டு submit பட்டனை கிளிக் செய்தவுடன் திரையில் பயனாளிகளின் நிலையை தெரிந்து கொள்ள முடியும். இதனை வைத்து உங்களுக்கு அடுத்த தவணை பணம் வருமா? வராதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.