இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 13 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 14-வது தவணை தொகை பணம் எப்போது வரும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
அதன்படி, மே மாதம் 15ஆம் தேதி 14-வது தவணை தொகைக்கான பணத்தை மத்திய அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவில்லை. மேலும், பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் PM Kisan வெப்சைட்டில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.