fbpx

“அப்பா என்ன விட்று” கெஞ்சிய மகள்; துடிதுடிக்க கொலை செய்த தந்தை..

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த தேவனஹள்ளி பிடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கு 20 வயதான கவானா என்ற மகள் உள்ளார். கல்லூரியில் படித்து வரும் இவர், வேறு ஜாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இவரது காதல் உறவு குறித்து அவரது தந்தைக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் கடும் கோவம் அடைந்துள்ளார். மேலும், தனது மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மஞ்சுநாதன், காதலை கைவிடும்படி மகளை பலமுறை எச்சரித்துள்ளார்.

ஆனால் தந்தை கூறியதை கண்டுக்கொள்ளாமல், கவானா தனது காதலனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு தந்தைக்கும் மகளுக்கும் காதல் விவகாரம் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், கத்தியால் தனது மகளின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் வெறியில் இருந்த மஞ்சுநாத், பலமுறை தனது மகளின் கை மற்றும் கால்களில் குத்தியுள்ளார்.

இதையடுத்து, அவரது மகள் துடிதுடித்து உயிரிழந்ததை அடுத்து, மஞ்சுநாத் அருகில் உள்ள விஸ்வநாதபுரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். ஆனால் ஏற்கனவே, கவானா தனது காதலுக்கு தனது தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி சமீபத்தில் காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இதையடுத்து பெண்களுக்கான அரசாங்க காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அவர், எப்படியாவது தனது காதலனை திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக கூறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற கவானா பெற்ற தந்தையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மஞ்சுநாத்தை கைது செய்தனர்.

Maha

Next Post

"ஒழுங்கா இத குடி"; சிறுமியை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து, டிரைவர் செய்த காரியம்..

Fri Oct 13 , 2023
நேபாள நாட்டை சேர்ந்தவர், 15 வயதான மோத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் நவிமும்பையை சேர்ந்த 21 வயதான சுபம் மாருதி என்ற ஆட்டோ டிரைவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் சிறுமியை, சுபம் மாருதி கடத்தியுள்ளார். சிறுமியை கடத்திய அவர், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வாடகை வீட்டில் வைத்து பல முறை பலாத்காரம் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல், […]

You May Like