fbpx

ஒன்றரை வயது குழந்தையை பலாத்காரம் செய்த தந்தை..!! பிறப்புறுப்பில் ரத்தக்காயம்..!! மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்..!!

தனது ஒன்றரை வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் (31) என்பவர், கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் தினந்தோறும் கஞ்சா மற்றும் மதுபோதையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டவரென சொல்லப்படுகிறது. இவருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ஒருநாள் இரவு இவர் தன் குழந்தையின் அருகில் படுத்துள்ளார். சற்று நேரத்தில் குழந்தை அழுதுள்ளது. மகளின் சத்தம் கேட்ட தாய், அருகில் வந்து பார்த்தபோது தனது கணவர் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை உணர்ந்துள்ளார். குழந்தையை உடனே அவரிடமிருந்து மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம் இருப்பதாக கூறியுள்ளனர்.

ஒன்றரை வயது குழந்தையை பலாத்காரம் செய்த தந்தை..!! பிறப்புறுப்பில் ரத்தக்காயம்..!! மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்..!!

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து அனைத்து மகளிர் போலீசார், குழந்தையின் தந்தை ராமராஜ் மற்றும் தாயிடம் விசாரணை செய்து, குழந்தையின் தந்தை மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

நண்பனின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடும் விஷ்ணு விஷால்..!! அப்படினா அதெல்லாம் உண்மை இல்லையா..?

Wed Dec 7 , 2022
தற்போது சினிமாவில் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் தான் ’வெண்ணிலா கபடி குழு’. முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அந்த வகையில், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக இவர் தன் நண்பனின் மரணத்தை பற்றி தற்பெருமை பேசி இருப்பது ரசிகர்களை கொதிப்படைய […]
நண்பனின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடும் விஷ்ணு விஷால்..!! அப்படினா அதெல்லாம் உண்மை இல்லையா..?

You May Like