fbpx

”கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிறுத்தி வைத்த நிதியமைச்சர்”..! – செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும்’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மக்களை ஏமாற்றும் நோக்கில் பல பொய்யான தேர்தல் அறிவிப்புகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தல் திமுகவுக்கு சரியான பாடமாக அமையும். திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. திமுக மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

”கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிறுத்தி வைத்த நிதியமைச்சர்”..! - செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழக நிதியமைச்சர் அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசி வருவதால், அரசு ஊழியர்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிதி அமைச்சர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டுகிறார். அவரை முதலில் மதுரை முழுவதும் ஆய்வு செய்ய சொல்லுங்கள். கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிதி அமைச்சர் நிறுத்தி வைப்பதாக திமுகவினரே குற்றம்சாட்டுகின்றனர்.” இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

நடப்பு கல்வியாண்டு முதல் 6 மாத சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்..! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

Mon Aug 8 , 2022
நடப்பு கல்வியாண்டு முதல் நகர்ப்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைத்தூரக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர்கள், மகளிர்கள், இளைஞர்கள், பள்ளிப்படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர்கள், கிராமங்களில் சிறுதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் தங்களின் தொழில்நுட்ப அறிவையும், அனுபவங்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் பல சான்றிதழ் பாடங்கள், […]
நடப்பு கல்வியாண்டு முதல் 6 மாத சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்..! தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

You May Like