முதல் வீட்டை வாங்குவது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு மைல்கல். முதல் முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் பல்வேறு வரி சேமிப்பு வழிகளை அணுகலாம். எனவே புதிய வீட்டு உரிமையாளர்களுக்குக் கிடைக்கும் வரிச் சேமிப்பு வாய்ப்புகளைப் பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியம். வீட்டு உரிமையை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முதல் முறையாக வாங்குபவர்களுக்கு மிகவும் மலிவு விலையில் உள்ளது.
வீட்டுக்கடன் வட்டி மீது வரி பிடிப்பு பிரிவு 24: வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 24 என்பது ஒரு முக்கியமான விதியாகும். இது வீட்டு கடன் மீது செலுத்தப்பட்ட வட்ட மீது விலக்குகளை கோர வரி செலுத்துபவர்களை அனுமதிக்கிறது. வீட்டு சொத்தை வாங்க அல்லது கட்டுவதற்கு வீட்டுக்கடன்களை பெற்ற வரி செலுத்துப்பவர்களுக்கு இந்த விதிமுறை குறிப்பிடத்தக்க நிவாரணத்தை வழங்குகிறது. இந்த விலக்கு உங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானத்தை கணிசமாகக் குறைக்கலாம், இது கணிசமான சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தில் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு, குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவுகள் அல்லது குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு வீட்டுக் கடன்களில் கணிசமான மானியங்களை வழங்குகிறது.
மலிவு வீட்டுத் திட்டம்: அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மலிவு விலை வீட்டுத் திட்டம் முதல் முறையாக வாங்குபவர்களுக்கு பெரிதும் உதவுகிறது. இந்த திட்டத்தின் கீழ், வீடு வாங்குபவர் 1 சதவிகிதம் குறைந்த ஜிஎஸ்டி விகிதத்தை மலிவு விலை வகைக்குள் அனுபவிக்க முடியும். ஜிஎஸ்டியில் இந்த குறைப்பு கணிசமான சேமிப்பாக இருக்கும். மேலும் வீட்டை வாங்குவதை வரி-திறன்மிக்கதாக ஆக்குகிறது.