fbpx

யானை பராமரிப்பாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்

ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப்படம் வெளியான பின்பு நீலகிரியை சேர்ந்த பொம்மனும் அவரது மனைவி பெள்ளியும் அனைவராலும் கொண்டாடப்பட்டனர். இதை தொடர்ந்து இருவரும் சர்வதேச அளவில் பிரபலமடைந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு குடியரசு தலைவரும், பிரதமரும் இருவரையும் பாராட்டினர். இந்நிலையில் தமிழக வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றி வந்த பெள்ளிக்கு, முதல் யானை பராமரிப்பாளராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. பெள்ளியே யானை பராமரிப்பாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் இந்த பணி நியமன ஆணையை வழங்கினார். எந்த யானை குட்டி வந்தாலும் அதையும் சிறப்பாக பராமரிப்போம். எத்தனை யானை குட்டிகள் வந்தாலும் அவற்றையும் பராமரிக்க தயாராக இருக்கிறோம் என்று சொன்ன தம்பதிக்கு கிடைத்த அங்கீகாரமே இந்த பணி நியமனம் என்றாலும் மறுப்பதற்கில்லை.

Maha

Next Post

என்னது திரிஷா அம்மா கேரக்டரிலா? ஷாக்கில் ரசிகர்கள்

Sun Aug 6 , 2023
நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். திரிஷா அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமன்னா அந்த படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் திரிஷா தெலுங்கில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ப்ரோ டாடி படத்தின் ரீமேக்கில், அவர் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா […]
மருத்துவமனையில் நடிகை த்ரிஷா அனுமதி..? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like