fbpx

கணவர் கண்ணெதிரே கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! கைகளை கட்டி தெரு தெருவாக இழுத்துச் சென்றதால் பரபரப்பு..!!

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் மங்காப்பேட்டை அரசுப் பள்ளியில் திருமணமான பெண் ஒருவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியரான நாகேந்திரபாபுவுக்கும் அந்த பெண் ஆசிரியைக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதையறிந்த அவரது கணவர் ஆயுதப்படை காவலர் ராஜு, தனது மனைவியின் தகாத உறவை கண்டித்து கள்ளக்காதலை கைவிடும்படி எச்சரித்துள்ளார். ஆனால், அதையும் மீறி நாகேந்திரபாபுவுடன் ஆசிரியை பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், தனது மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை கண்ட ராஜூ, இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைகளை கயிற்றால் கட்டி, கிராமத்தை சுற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு கல்வி கற்பித்து நல்லொழுக்கத்திற்கு கொண்டு வர வேண்டிய ஆசிரியர்கள் இவ்வாறு திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்துக் கொண்டு கணவரால் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ரயில் பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! இனி இதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்..!!

Wed Feb 22 , 2023
ரயிலில் பயணிக்கும்போது இனி நீங்கள் உணவு ஆர்டர் செய்தால், கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆம், ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வானது ரொட்டி முதல் தேநீர் வரை என அனைத்திலும் பொருந்தும். ரயில்வே உணவு மெனுவில் மேலும் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக IRCTC தெரிவித்துள்ளது. இதனால் […]

You May Like