fbpx

நண்பனின் மனைவியுடன் உல்லாசம்..!! இடையூறாக இருந்ததால் கறி விருந்துக்கு அழைத்து கழுத்தை அறுத்துப் போட்ட கொடூரம்..!!

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் மொட்டையன் காலனியை சேர்ந்தவர் மணி (32). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணியின் நண்பரான சிவக்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. வீட்டில் மணி இல்லாத நேரத்தில், இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் மணிக்கு தெரியவந்ததை அடுத்து கோவிந்தம்மாளை கண்டித்துள்ளார். ஆனால், இதுதொடர்பாக நண்பனிடம் கேட்க மணி தயங்கினார். இந்நிலையில், உனக்கு பிடித்த கறி குழம்பை செய்துள்ளேன் வீட்டிற்கு வா இரண்டு பேரும் மது அருந்தலாம் என அன்போடு மணியை சிவக்குமார் அழைத்துள்ளார். இதனையடுத்து, மணியும் சிவக்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் தனது மனைவியுடன் கள்ளக்காதல் குறித்து சிவக்குமாரிடம் மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

நண்பனின் மனைவியுடன் உல்லாசம்..!! இடையூறாக இருந்ததால் கறி விருந்துக்கு அழைத்து கழுத்தை அறுத்துப் போட்ட கொடூரம்..!!

இதனால், ஆத்திரமடைந்த சிவக்குமார், மணியின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க திட்டமிட்ட சிவக்குமார், மணி அதிக அளவில் மது குடித்ததால் போதையில் இருப்பதாக கூறி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மணியை அவருடைய வீட்டில் வைத்துவிட்டு வந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கணவர் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த கோவிந்தம்மாள், சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே எதுவும் தெரியாதது போல வந்த சிவக்குமார் மணியை அழைத்துக் கொண்டு பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிவக்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மணியை கொலை செய்துவிட்டு சிவக்குமார் நாடகமாடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் மனைவிக்கு தொடர்பு இருக்கிறதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

’தளபதி 67’..!! வெளியானது புதிய வீடியோ..!! ரசிகர்கள் செம குஷி..!!

Fri Feb 3 , 2023
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 67’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் […]

You May Like