fbpx

உணவுப் பொருட்களை இனி அதிக விலைக்கு விற்க முடியாது..!! ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடி நடவடிக்கை..!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், வழக்கத்தை விட ரயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், ரயில்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தற்போது பயணிகள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது, ரூ.100 மேல் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே அதிக விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க ஐஆர்சிடிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என ஐஆர்சிடிசி எச்சரித்துள்ளதோடு, விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் 10 வழித்தடங்களில் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் தெரிந்து விடும். மேலும், இனிவரும் நாட்களில் இன்னும் சில முக்கிய ரயில்களிலும் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அடுத்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவாரா..? சுரேஷ் ரெய்னா சொன்ன குட் நியூஸ்..!!

Wed May 10 , 2023
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமானதாக உள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருக்கும் நிலையில், அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தோனிக்காகவே தமிழ் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை காண ஆர்வமாக செல்கிறார்கள். இந்நிலையில், தோனி இந்த வருடம் ஐபிஎல் போட்டியோடு ஓய்வு பெறுவதாக சமீப காலமாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால், தோனி […]

You May Like