fbpx

நாட்டிலேயே முதல்முறையாக தண்ணீருக்கு பட்ஜெட் போட்ட மாநிலம்..!! அசத்தும் கேரளா..!!

கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் தண்ணீருக்கென தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலத்தில் தண்ணீருக்காக தனியாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் கொண்டு வரப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில் நீர் இருப்பு குறைந்து வருவதால் வளத்தை முறையாக பயன்படுத்தவும் நீர் வீணாவதை தடுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் 44 ஆறுகள், உப்பளக்கழிகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் மற்றும் நல்ல மழை வளம் இருந்தாலும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், நீர் வீணாவதை தடுக்கவும் தண்ணீர் பட்ஜெட் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

இளைஞர்களே உஷார்..!! வாட்ஸ் அப் மூலம் இப்படியும் உங்களை ஏமாற்றலாம்..!! ஜாக்கிரதையா இருங்க..!!

Tue Apr 18 , 2023
ஆன்லைன் மூலம் நாளுக்கு நாள் புதிய புதிய மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சைபர் குற்றப் பிரிவு போலீசார் இதனால் பிஸியாகி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக பல கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியும் பல்வேறு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது வாட்ஸ் அப் வேலைவாய்ப்பு மோசடி புதிய தலைவலியாக உருவாகியுள்ளது. வேலை தேடும் இளைஞர்கள் இந்தியாவில் அதிக […]

You May Like