fbpx

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு..!! இடி மின்னலுடன் மழை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால், கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்து 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், கரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில இடங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்திற்கு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

மக்களே மாம்பழங்கள் வாங்கும்போது கவனம்..!! ரசாயன கல் வைத்து பழுக்க வைத்ததை நீங்களே கண்டுபிடிக்கலாம்..!!

Wed Apr 26 , 2023
மாம்பழ சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில், மாம்பழங்களை எப்படி பார்த்து வாங்குவது, ரசாயன கல் வைத்து பழுக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. பொதுவாக மாம்பழங்கள் தானாக பழுக்க வேண்டும். சிலர் அதை அரிசி டிரம்பில் போட்டு வைப்பர், சிலர் வைக்கோல் போட்டு அதில் மாம்பழங்களை வைத்து பழுக்க வைப்பர். இதுதான் இயற்கையானது. இதனால் எத்தனை மாம்பழங்களை சாப்பிட்டாலும் […]

You May Like