கேரளாவில், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்குவதற்கு, முக்கிய நகரங்களில் இலவச தங்கும் மையம் அமைக்கப்பட உள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரளாவில் உள்ள முக்கிய நகரங்களில் “மையம் எனது கூடு” என்ற பெயரில் அரசு மையம் தொடங்கப்படும் என்றார்.
இந்த மையங்களில் இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு அளிக்கப்படும் என்றும், அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை பெண்கள் அங்கு தங்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், ஆன்லைன் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது என்றும் அவர் கூறினார்.