மேற்கு வங்க ஆளுநராக டாக்டர் சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கா் குடியரசு துணைத் தலைவராக கடந்த ஜூலை மாதத்தில் பதவியேற்றதைத் தொடா்ந்து, மணிப்பூா் மாநில ஆளுநா் இல. கணேசன் மேற்கு வங்க ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா்.
இந்த நிலையில் டாக்டர் சி.வி ஆனந்த போஸை மேற்கு வங்காளத்தின் ஆளுநராக நீ ஒரு செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இந்த நியமனம் அவர் தனது பதவியை பொறுப்பேற்ற நாளிலிருந்து அமலுக்கு வரும்” என்று குடியரசுத் தலைவரின் செய்திச் செயலாளர் அஜய் குமார் சிங் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
1977 கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான சி.வி. ஆனந்த போஸ், 2011-இல் தேசிய அருங்காட்சியகத்தின் நிா்வாக தலைவராக இருந்தாா். கேரள அரசிலும், மத்திய அரசிலும் பல்வேறு துறைகளில் சி.வி. ஆனந்த் போஸ் பணியாற்றி உள்ளாா். கொல்லத்தின் மாவட்ட ஆட்சியராகவும், கேரள முதல்வரின் செயலராகவும், மத்திய வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும் அவா் பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.