ராஜஸ்தான் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்றுடன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளதாவது, சமீபத்தில் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
முழு உடல் பரிசோதனை செய்ததில், கோவிட் தொற்று பாதிப்பும், பன்றிக்காய்ச்சலும் இருப்பது உறுதியாகியுள்ளது. என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். கடந்த சில தினங்களில் என்னிடம் நேரில் தொடர்பு கொண்டவர்கள். உடனடியாக தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.