முன்னாள் துணை பிரதமரும், பாஜக-வின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முன்னாள் துணை பிரதமர் அத்வானி, இன்றைய தினம் (ஜூலை 6) மீண்டும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த நரம்பியல் மருத்துவர் வினித் சூரியின் மருத்துவக் கண்காணிப்பில் அத்வானி, சிகிச்சை பெற்று வருகிறார். எல்.கே. அத்வானி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜூன் 27ஆம் தேதி வீடு திரும்பினார். பின்னர், கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எல்.கே. அத்வானி 2002 ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய நாட்டின் துணை பிரதமராகவும், 1999-2004 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
Read More : 2 நாடுகளுக்கு இடையேயான போர்..!! மற்ற நாடுகளும் தலையீடு..!! மிகப்பெரிய மோதல் இருக்கு..!!