fbpx

வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் தற்கொலை..!! சித்ரவதை காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

சீன வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் கின் காங் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது சித்ரவதை காரணமாக உயிர் பிரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீன வெளியுறவு அமைச்சராக இருந்த கின் காங் திடீரென மாயமானார். அவரை பற்றிய எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஆனால், ஜூலை மாதம் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், கின் காங்கிற்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வந்ததாகவும், அதற்கு அவர் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டது. சீன கம்யூனிஸ்ட் சார்பில் நடந்த உட்கட்சி விசாரணையில், கின் காங் அமெரிக்க தூதராக இருந்த போது, திருமணத்தை தாண்டிய உறவில் இருந்தது உறுதியானதாகவும், அதன் மூலம் ஒரு குழந்தை உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் கின் காங் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், அங்கு உயிரிழந்துவிட்டதாகவும் சீன உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. கின் காங் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது சித்ரவதை காரணமாக உயிர் இழந்திருக்கலாம் எனவும் அந்நாட்டில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

’வாட்ஸ் அப் பயனர்களே உஷார்’..!! ’இப்படியும் உங்களை ஏமாற்றுவார்கள்’..!! சைபர் கிரைம் எச்சரிக்கை..!!

Thu Dec 7 , 2023
வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில், புதிய எண்களில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, அவர் நமக்குத் தெரிந்தவர் தான் என்று நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்தாண்டில் நடந்த அதிகபட்ச சைபர் குற்றங்கள் சென்னையில் தான் பதிவாகியிருக்கிறது. அடுத்த இடங்களில் தாம்பரமும் ஆவடியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, தமிழ்நாட்டில் பதிவான ஒட்டுமொத்த சைபர் குற்றங்களில் 21% குற்றங்கள் சென்னையில் பதிவாகியுள்ளது. சைபர் குற்றங்கள் […]

You May Like