தமிழக முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 77.
அதிமுகவின் முக்கிய பிரமுகராக இருந்த சேடப்பட்டி முத்தையா 1977,1980,1984, 1991 ஆகிய ஆண்டுகளில் சேடப்பட்டி தொகுதியில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் சேடப்பட்டி முத்தையா.. 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா பதவி வகித்தார். பெரியகுளம் எம்.பி தொகுதியில் வெற்றி பெற்று வாஜ்பாய் அரசில் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.. இதனிடையே 2006-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா, திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார்..
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.. அவரின் உடல் சொந்த ஊரான சேடப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகன், 2 மகள்களும் உள்ளனர்.. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..