fbpx

பெண்களுக்கான இலவசப் பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறத்திலேயே மாற்றம்..! போக்குவரத்துத்துறை அதிரடி..!

பெண்களுக்கான இலவசப் பேருந்து முழுவதையும் பிங்க் நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை தமிழக போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது.

பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் பேருந்தில் முன்புறம் மட்டும் பிங்க் (PINK) நிற பெயிண்ட் அடிக்கப்பட்டன. இந்த பிங்க் நிற பேருந்துகளின் சேவையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் தொடங்கி வைத்தார். பேருந்தில் முன்புறம் மட்டும் பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த நிலையில், அது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

பெண்களுக்கான இலவசப் பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறத்திலேயே மாற்றம்..! போக்குவரத்துத்துறை அதிரடி..!

இந்நிலையில், பெண்களுக்கான இலவசப் பேருந்து முழுவதையும் பிங்க் நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மூன்று பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் அனைத்தும் 29 C Besent Nagar Route இல் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் முழுமையாக பிங்க் நிறமாக மாற்றப்பட்டுள்ளதற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Chella

Next Post

டிஎன்பிஎஸ்சி தேர்வு..! வயது வரம்பை உயர்த்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்..! ராமதாஸ் கோரிக்கை

Fri Aug 12 , 2022
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயதை 40ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டிஎன்பிஎஸ்சி நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பை உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தமிழக […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு..! வயது வரம்பை உயர்த்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்..! ராமதாஸ் கோரிக்கை

You May Like