fbpx

இலவச விமான பயணம்.. இந்த தேதிக்குள் முன்பதிவு செய்தால் மட்டுமே.. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு…

ஏர் ஏசியா நிறுவனம் ‘இலவச விமானப் பயணம்’ சலுகையைக் கொண்டு வந்துள்ளது..

பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொரோனாவுக்கு முந்தைய வணிக நிலைக்குத் திரும்பியுள்ளன.. இதை மனதில் வைத்து ஏர் ஏசியா விமானப் பயணிகளுக்கு ‘இலவச’ சலுகையைக் கொண்டு வந்துள்ளது. அந்நிறுவனம் 50 லட்சம் இலவச விமான (சீட்) டிக்கெட்டுகளை வழங்குகிறது. இருப்பினும், இந்த டிக்கெட்டுகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. இது குறித்த விரிவான தகவல்களை ஏர் ஏசியா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சிறப்பு என்னவென்றால், இந்த இலவச டிக்கெட் சலுகை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்..

அதாவது நீங்கள் ‘இலவச’ டிக்கெட்டுகளைப் பெற விரும்பினால், செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் உங்கள் முன்பதிவு செய்யுங்கள். ஜனவரி 1, 2023 முதல் அக்டோபர் 28, 2023 வரையிலான பயணங்களுக்கு இந்த சலுகை பொருந்தும். பெரும்பாலான ஆசிய நாடுகளுக்குப் பொருந்தும். இந்த 50 லட்சம் இலவச இருக்கைகள் ஏர் ஏசியாவின் இணையதளம் மற்றும் செயலி இரண்டிலும் கிடைக்கிறது. Flights” ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு 5 மில்லியன் இலவச இருக்கைகளை ஏர் ஏசியா வழங்குகிறது. இந்த இலக்குகளில் பாங்காக்-ல் இருந்து கராபி மற்றும் ஃபூகெட்டுக்கு நேரடி விமானங்களும், பாங்காக்கிலிருந்து (டான் மியூயாங்) சியாங் மாய், சாகோனுக்கு நேரடி விமானங்களும் அடங்கும். கூடுதலாக, லங்காவி, பினாங்கு, ஜோகூர் பாரு, கிராபி, பூ குவோக் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல ஆசியான் நாடுகளில் உள்ள பிரபலமான உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு இலவச இருக்கைகள் கிடைக்கின்றன. இலவச இருக்கைகளில் கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

ஏர் ஏசியாவின் குழுமத் தலைமை வர்த்தக அதிகாரி கரேன் சான் கூறுகையில், “எப்போதும் இல்லாத மிகப்பெரிய இலவச சீட் சலுகைக்காக எங்களுடன் இணைந்த எங்கள் நம்பகமான பயணிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எங்களுக்குப் பிடித்தமான பல இடங்களை மீண்டும் துவக்கியுள்ளோம். மேலும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான இடங்களுக்கு விமான சேவையை தொடங்குவோம்..” என்றார்.

தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் உட்பட பல ஆசிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்தச் சலுகைக்கு தகுதியுடையவர்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏர் ஏசியா வாடிக்கையாளர்களுக்கு இலவச பயணத்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

தீண்டத்தகாத சாதி எது..? சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சை கேள்வி..

Tue Sep 20 , 2022
தீண்டத்தகாத சாதி எது என்று சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.. மதுரை வல்லபா வித்யாலயா பள்ளியில் நேற்று 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட தேர்வு நடைபெற்றது.. இந்த தேர்வில், மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாத சாதியாக இருந்தது என கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து அப்பள்ளியில் படிக்கும் மாணவரின் பெற்றோர் ஒருவே பள்ளி நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து விளக்கமளித்த பள்ளி நிர்வாகம் “ […]
exam

You May Like