fbpx

”அம்மா உணகங்களில் இலவச உணவு”..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

சென்னை அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று அதிகளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை – எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் முழுமையாக தண்ணீர் வடிந்தது. மீதமுள்ள 103 இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் 54 மரங்கள் விழுந்த நிலையில், அவைகள் முழுமையாக அகற்றம் செய்யப்பட்டன. மொத்தம் 300 நிவாரண முகாம்களில், 27 இடங்களில் 944 பேர் தங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 7.18 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா..? பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!!

English Summary

Chief Minister M. K. Stalin has announced that free food will be provided in Amma restaurants in Chennai today and tomorrow.

Chella

Next Post

’மாநாடு நடத்தும் தேதி பருவமழை காலமா இருக்கு’..!! ’என்ன பண்ணலாம்னு இருக்கீங்க’..? தவெக-வுக்கு மீண்டும் நோட்டீஸ்..!!

Wed Oct 16 , 2024
As the first conference of Thaveka is about to take place, the police has again sent a notice to the party's general secretary.

You May Like