fbpx

சாலை விபத்தில் அடிபட்டால் இலவச சிகிச்சை!… 3 மாதங்களில் அறிமுகம்!… மத்திய அரசு திட்டம்!

சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு, ‘கேஷ் லெஸ்’ எனும், மருத்துவமனைக்கு கையிலிருந்து பணம் செலுத்த தேவையில்லாத சிகிச்சையை, நாடு முழுதும் அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை செயலர் அனுராக் ஜெயின் தெரிவித்துள்ளார்.

விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலவச சிகிச்சை அளிப்பது, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் ஒரு பகுதியாகும். இதை சில மாநிலங்கள் அமல்படுத்திஉள்ளன. இதைத்தொடர்ந்து, தற்போது சாலை போக்குவரத்து அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து, நாடு முழுதும் இதை முழுமையாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த வசதி மூன்று அல்லது நான்கு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு, ‘கோல்டன் ஹவர்’ எனப்படும், விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமாக கருதப்படுகிறது.

இந்நேரத்திற்குள் சாலை விபத்துக்குள்ளானவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்து, அவர்களது உயிரை காத்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக, பள்ளி, கல்லுாரி பாடத்திட்டங்களில் ஒரு பகுதியாக, சாலை பாதுகாப்பை விரைவில் செயல்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில், நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்து வருகிறது என்றும் அனுராக் ஜெயின் தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

இன்று மின்சார ரயில்கள் இயங்கும்..!! ஆனால், இந்த பகுதிகளுக்கு மட்டும்தான்..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

Wed Dec 6 , 2023
கடந்த இரு தினங்களாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சார விநியோகம் இல்லை. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், விமான நிலையமும் மூடப்பட்டது. அனைத்து மின்சார ரயில்களும் கடந்த இரு தினங்களாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு வழியாக செல்லும் மின்சார ரயில்கள் இயக்கபடுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரை மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு […]

You May Like