fbpx

”குறைந்து வரும் சூரியனின் எரிபொருள்”..!! ”பூமியை விழுங்கும் அபாயம்”..!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக வந்திருக்கிறோம்? என்கிற கேள்வி எல்லா மனிதனையும் தற்போதுவரை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கான விடையை தேட நாம் வந்த வழியை நோக்கி பயணிக்க வேண்டும். அதாவது பூமி, சூரிய குடும்பம், அண்டம், பால்வழி அண்டம், விண்மீன் திரள்கள், பிரபஞ்சம் என அனைத்தையும் ஆராய வேண்டும். இதற்கான ஆய்வுகள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல சூரியன் பற்றிய ஆய்வும் நடந்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி, “சூரியக் குடும்பம் உருவாகி ஏற்கனவே 450 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த குடும்பம் செயல்படத் தேவையான எரிபொருள், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் முடிவடைந்துவிடும். பின்னர், சூரியன் விரிவடைந்துகொண்டே வந்து ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் அழித்துவிடும். இன்னும் 1000 கோடி ஆண்டுகளுக்கு பிறகு பூமி உள்ளிட்ட பிற கோள்கள் எதுவுமே இருக்காது” என்று அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார்.

இந்த பிரபஞ்சத்தில் 2 நட்சத்திரங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. இதனை பைனரி ஸ்டார்ஸ் என்று சொல்வார்கள். ஆனால், நமது சூரிய குடும்பத்தில் மட்டுமே ஒரேயொரு நட்சத்திரமாக சூரியன் மட்டுமே இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் நல்லதுதான். ஏனென்றால், தற்போது சூரியனிலிருந்து நாம் பெறும் வெப்பம் போதுமானதுதான். இதுவே 2 நட்சத்திரங்கள் இருப்பின் அது பூமியை அதிக வெப்பமடைய செய்து உயிர்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற்றிவிடும்.

நமது சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கோள் ஒரு தோல்வியடைந்த நட்சத்திரம் ஆகும். ஆனால், விண்வெளியில் இருந்து வரும் பல விண்கற்கள் பூமியில் விழாமல் பாதுகாப்பது இந்த வியாழன் கோள்தான். எனவே, இதன் அருகில் எந்த விண்கற்கள் சென்றாலும் அதை வியாழன் இழுத்து பிடித்து வைத்துக்கொள்ளும். ஆனால் இன்னும் 1,000 கோடி ஆண்டுகள் கழித்து சூரியனின் எரிபொருள் தீர்ந்த பிறகு அது விரிவடையும். இப்படி விரிவடையும் போது புதன், வெள்ளி, பூமி போன்ற கோள்களை அது தனக்குள்ளே விழுங்கி விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அப்படியெனில் 1,000 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் பூமி இருக்காது. எனவேதான் மேலை நாடுகள் விண்வெளி ஆய்வில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றன.

Chella

Next Post

மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சகத்தில் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு.....! இந்த தகுதி மட்டும் போதும், உடனே விண்ணப்பியுங்கள்....!

Thu Sep 21 , 2023
நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று, மத்திய கூட்டுறவு துறை அமைச்சகத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, அந்த துறையில் காலியாக இருக்கின்ற co-operative ombudsman பணிக்கான இடம் காலியாக உள்ளதாக தெரிகிறது. இந்த பணிக்கு ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக […]

You May Like