fbpx

காலையிலேயே ஃபுல் போதை..!! காரை ஓட்டி உயிர் பலி வாங்கிய துணை நடிகர்..!! சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் பைக்கில் சென்றவர் மீது துணை நடிகர் பழனியப்பனின் கார் மோதியதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் சரண்ராஜ் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக துணை நடிகர் பழனியப்பன் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சரண்ராஜ் மீது பழனியப்பனின் கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது பழனியப்பனிடம் விசாரணை நடத்தியதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த சரண்ராஜின் உடலை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Chella

Next Post

தர்மபுரி| வனப்பகுதியில் இளம்பெண் படுகொலை…..! காவல்துறையினர் தீவிர விசாரணை…..!

Thu Jun 8 , 2023
தர்மபுரி அருகே கடத்தூரான் கொட்டாய் அடுத்துள்ள நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இளம் பெண் ஒருவர் பாறைகளுக்கு இடையில் உயிரிழந்த நிலையில், கிடந்திருக்கிறார். அந்த வழியே சென்ற மக்கள் இது தொடர்பாக அதிகமான்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் சென்று இது குறித்து ஆய்வு நடத்தினார். அதோடு அதியமான் கோட்டை காவல்துறையினர் சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி […]

You May Like