fbpx

மருமகளுடன் உல்லாசம்..!! எரிந்த நிலையில் கிடந்த உடல்..!! 72 வயது முதியவரை தீர்த்துக் கட்டிய நண்பன்..!!

மருமகளுடன் கள்ளக்காதல் தொடர்பில் இருந்த முதியவரை கொன்று உடலை தீ வைத்து எரித்த காவலாளி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே சேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 72). இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், இரண்டு மகன்கள் மற்றும் மகள் திருமணமாகி கோவையில் வசித்து வருகின்றனர். ரங்கசாமி மட்டும் சேர்வைக்காரன்பட்டியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தான், கடந்த 2ஆம் தேதி முதல் ரங்கசாமியை காணவில்லை என அவரது மகன் யுவராஜா (40) கடந்த 17ஆம் தேதி குஜிலியம்பாறை போலீசில் புகாரளித்தார்.

அதன்பேரில் ரங்கசாமியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வந்த கோவிந்தராஜ் (64) என்பவருடன் ரங்கசாமி சீட்டு விளையாடி வந்தது தெரிந்தது. கோவிந்தராஜை பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கோவிந்தராஜ் பண்ணக்காரன்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் மகன் வடிவேல்குமார் மற்றும் மருமகள் ஈஸ்வரி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

அப்போது கோவிந்தராஜுக்கும் அவரது மருமகள் ஈஸ்வரிக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஈஸ்வரி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சேவைக்காரன்பட்டியில் உள்ள ரங்கசாமியின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அப்போது மருமகள் ஈஸ்வரியும், ரங்கசாமியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதைப் பார்த்து கோவிந்தராஜ் ஆத்திரமடைந்துள்ளார்.

இதையடுத்து தான், ரங்கசாமியை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். கடந்த 2ஆம் தேதி ரங்கசாமியை தனது வீட்டிற்கு வரவழைத்த கோவிந்தராஜ், மருமகளுடான கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால், அப்போது ஏற்பட்ட தகராறில் ரங்கசாமியை, கோவிந்தராஜ் பலமாக தாக்கி வீட்டில் இருந்த சிமெண்ட் தூணில் ரங்கசாமியின் தலையை மோத வைத்தார்.

அப்போது, சம்பவ இடத்திலேயே ரங்கசாமி உயிரிழந்தார். பின்னர், இரவு அவரின் உடலை சாக்குப் பையில் கட்டி அருகில் உள்ள வரட்டாற்று ஓடைக்கு எடுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளார் கோவிந்தராஜ். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குஜிலியம்பாறை போலீசார் கோவிந்தராஜை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Read More : விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! 30,000 புதிய மின் இணைப்புகள்..!! உங்களுக்கும் கிடைக்கப் போகுது..!! மின்வாரியத்திற்கு பறந்த உத்தரவு..!!

English Summary

A security guard who killed an old man who was involved in adultery with his daughter-in-law and set his body on fire was arrested.

Chella

Next Post

ஆஹா..!! எல்லாமே புதுசா இருக்கே..!! நோட் பண்ணீங்களா..? புதிய லோகோ..!! புதிய அம்சங்கள் அறிமுகம்..!!

Tue Oct 22 , 2024
State-owned Bharat Sanchar Nigam Limited (BSNL) has replaced its old logo with a new one today (Oct 22).

You May Like