fbpx

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சா..? திட்டமிட்ட பொய்..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி..!!

கிண்டி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”கிண்டி ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையில் தான் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது. ஆளுநர் மாளிகை பாஜகவின் அலுவலகமாக மாறியுள்ளது. பெட்ரோல் குண்டு சம்பவத்தில் நடந்தது குறித்து காவல்துறை சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளது.

மீனவர்கள் விவகாரம் குறித்து எடுத்துரைக்க டி.ஆர்.பாலுவை டெல்லி அனுப்பி வைத்துள்ளேன். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேச அவர் சென்றுள்ளார். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே திராவிடம். இன்னாருக்கு இதுதான் என்று சொல்வது ஆரியம் என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

லியோ திரைப்படத்தின் வெற்றி விழா..!! அனுமதி வழங்கிய காவல்துறை..!! ஆனால், கட்டுப்பாடுகளும் விதிப்பு..!!

Mon Oct 30 , 2023
லியோ திரைப்பட வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழா வரும் நவம்பர் 1ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடத்த படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பெரியமேடு காவல் நிலையத்தில் படத்தயாரிப்பு நிறுவனம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியது. இந்நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பும் கேட்கப்பட்டது. இந்நிலையில், […]

You May Like