இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சானிட்டரி நாப்கின்களில் அதிகமான ரசாயனங்கள் உள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான கடைகளில் பயன்படுத்தப்படும் சானிட்டரி பேட்களை வாங்குவதற்கு முன் நாம் அவற்றை முழுமையாக சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, எந்த பிராண்டில் அதிக ஆர்கானிக் என்று ஆராய்ச்சி கூறுவதை கவனிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில், இந்தியாவில் கிடைக்கும் 10 வகையான சானிட்டரி பேட்களை வைத்து ஆராய்ச்சியாளர்கள் சோதனை நடத்தினர்.

இதில், அதிகப்படியான பித்தலேட்டுகள் மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்களின் தடயங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை இரசாயனங்கள் புற்றுநோய் செல்களை உருவாக்கும் திறன் கொண்டவைகளாக உள்ளது. அதேபோல் கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், கரு வளர்ச்சியில் உள்ள சிக்கல்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.