fbpx

’மேகதாது அணை கட்ட அனுமதி கொடுங்க’..!! ’இல்லையென்றால் ’கர்நாடகாவில் இனி தமிழ் படங்கள் ஓடாது’..!! வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஆட்சேபம் இல்லை என கூறாவிட்டால், கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையில் நேற்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டது. மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன் அணை கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தார்.

ஆனால், இதுதொடர்பாக பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல், தலைகீழாக நின்றாலும் கர்நாடகா அரசால், மேகதாது அணையை கட்ட முடியாது” என பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி தமிழக – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது, அந்த அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் கூறுகையில், “மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒரு மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால், கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவே மேகதாது அணை கேட்கிறோம்” என எச்சரித்துள்ளார்.

Read More : அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்..? கேள்வி கேட்டதுமே பிரேமலதா கொடுத்த ரியாக்‌ஷன்..!! மீண்டும் சலசலப்பு..!!

English Summary

Vattal Nagaraj, a member of the Kannada organization, has warned that Tamil films will not be screened in Karnataka unless the Tamil Nadu government says it has no objection to the construction of the Mekedadu Dam.

Chella

Next Post

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உடன் பணிபுரிந்த ஹைதராபாத் நிஜாம்.. ரூ.100 கோடி பேரரசுக்கு சொந்தக்காரர்..! யார் தெரியுமா?

Sat Mar 8 , 2025
Born on July 23, 1960, Azmet Jha is not only a royal heir but also a film director,

You May Like