தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் பயனடையும் விதமாக, இலவச பஸ் பாஸ் வசதி ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தங்களுடைய பள்ளிகள் மூலமாக இந்த பயண அட்டையை பெற்றுக் கொள்ளலாம். பின்னர் அது மூலம் கல்வி ஆண்டு முழுவதும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.
அந்த விதத்தில், தமிழகத்தில் இந்த வருடம் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்ற நிலையில், பள்ளிகள் திறந்து 15 நாட்கள் கடந்து விட்டதால் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பேருந்து பயண அட்டையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக விண்ணப்பம் செய்ய பள்ளி தள்ளித் துறை அறிவித்திருக்கிறது. மற்றும் இணையதளம் மூலமாகவும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.