தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் செயல்பட தொடங்கிவிட்டனர். மாணவர்களும் அடுத்ததாக தங்களுடைய தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெற உள்ளார்.
இந்த நிலையில் தான் அவருடைய கடைசி உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. மாணவர்களின் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எதுவாக குறைந்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்தவும், மாதந்தோறும் மாணவர்கள் தங்கள் படித்த புத்தகங்களை பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தலைமைச் செயலாளர் இறையன்பு. தலைமைச் செயலாளராக அவர் போடும் கடைசி உத்தரவு இதுவாகும்.