தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
இன்றைய (டிசம்பர் 27) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.47,200-ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,900ஆக விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 6,370ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.50,960-ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.80.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.