fbpx

தங்கம் விலை இன்று ரூ.112 உயர்வு.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ. ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது… சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ. ரூ.38,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. விற்பனை செய்யப்படுகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு அதிகரித்து ரூ.59-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.59,000-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

’சமூக நல வாரியம் திடீர் கலைப்பு’..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

Tue Sep 6 , 2022
ஒன்றிய அரசின் உத்தரவால் சமூக நல வாரியம் கலைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோரின் பிரச்சனைகளை களைவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, உள்ளிட்ட […]

You May Like