fbpx

Gold Rate : கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை.. ரூ.59 ஆயிரத்தை நெருங்குவதால் நகைப்பிரியர்கள் ஷாக்..!!  

இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று (ஜனவரி 11) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58,720-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.7,340-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.1,01,000-க்கும் விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read more ; எப்பேர்பட்ட காயத்தையும் ஆற்றும் தாத்தா பூ செடி.. இதுல இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கா..?

English Summary

Gold Rate: The price of gold has increased sharply.. Jewelers are shocked as it approaches Rs. 59 thousand

Next Post

கடைகளில் QR ஸ்கேன் செய்ய போறீங்களா? மொத்த பணத்தையும் இழக்க வாய்ப்பு.. உஷார் மக்களே..!!

Mon Jan 13 , 2025
People are also stealing money using QR codes: Are there so many types of frauds?

You May Like