தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால், இந்தாண்டு வைகாசி விசாகம் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி காலை வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வருவார்கள். இதனை முன்னிட்டு ஜூன் 2ஆம் தேதியான இன்று முழுவதும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வைகாசி விசாக விழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஜூன் 10ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.