நாட்டில் கடந்த 592 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகிறது. அடுத்த சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவி வருகின்றன. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்கவும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.6 குறைக்கவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் ச்வெளியாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.