fbpx

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..!! இனி யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம்..!! முக்கிய அறிவிப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 10 நாடுகளில் இருந்து யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்குள்ள சர்வதேச மொபைல் எண் வழியாக யுபிஐயில் பதிவு செய்து பணம் அனுப்ப அனுமதி வழங்கும்படி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்றுக்கொண்டு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்ஹாங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி, ஐக்கிய அரபு எமிரேட், இங்கிலாந்து ஆகிய 10 நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐயில் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து பணம் அனுப்பலாம். ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அவர்கள் தங்கள் என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ கணக்குகளை சர்வதேச மொபைல் எண்ணுடன் இணைத்து யுபிஐயில் பதிவு செய்ய வேண்டும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..!! இனி யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம்..!! முக்கிய அறிவிப்பு

அந்தந்த நாடுகளின் கைப்பேசி எண்ணின் முதல் இலக்கங்களை வைத்து பணப் பரிவா்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்படும். விரைவில் பிற நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்பிசிஐ தலைவா் விஷ்வாஸ் படேல் கூறுகையில், ”சா்வதேச எண்ணை யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு பயன்படுத்துவது பெரும் சவாலாக இருந்தது. இந்தியாவுக்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும்” என்றாா்.

Chella

Next Post

பேஸ்புக் காதலியை தனிமையில் அழைத்துச் சென்ற காதலன்..!! கூடவே வந்த நண்பர்கள்..!! ஷாக்கிங் வீடியோ..!!

Thu Jan 12 , 2023
மாணவியை காதலிப்பதாக நாடகமாடி, அவருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி, பணம் பறித்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (21). இவருக்கும் மதுரையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மலர்ந்ததை அடுத்து, இருவரும் பல இடங்களுக்கு சென்று ஜாலி செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த […]

You May Like