fbpx

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பெரும் வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது ரேஷனில் அரசால் ஒரு பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்டு வைத்திருப்போருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். இதற்கிடையே, 2024ஆம் ஆண்டுக்குள் சத்து நிறைந்த தரமான அரிசியை அரசு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விநியோகிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் தற்போதைய நோக்கம் ஆகும். இந்த அரிசி தற்போது 269 மாவட்டங்களில் பிடிஎஸ் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது. முன்னதாக விநியோகிக்கப்பட்ட அரிசியை விட இந்த அரிசியின் தரம் சிறப்பாக உள்ளதாக ரேஷன் அட்டைதாரர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த அரிசியில் சத்துக்கள் நிறைந்திருப்பதாக அரசிடமிருந்து தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

ஆகவே, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த தரமான அரிசி அரசால் இலவசமாக வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. அதோடு பொதுமக்கள் மத்திய அரசின் முழுமையான ரேஷன் பெறுவதற்கான சிறப்பு வசதியும் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, ​​தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மின் தராசுகளுடன் மின்னணு பாயின்ட் ஆஃப் சேல் (EPOS) சாதனங்களை இணைக்க அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. இதனால் ரேஷன் கார்டுதாரர்கள் முழுமையாக ரேஷனை பெறலாம்.

Chella

Next Post

தேசிய விருது வென்ற பழம்பெரும் நடிகை காலமானார்... பிரபலங்கள் இரங்கல்..

Thu Apr 13 , 2023
பழம்பெரும் நடிகையும், நாடகக் கலைஞருமான உத்தாரா பாக்கர் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 79.. தேசிய நடிப்பு பள்ளியில் நடிப்பை பயின்ற உத்தாரா பாக்கர், முகிஹாமந்திரி, மேனா குர்ஜாரி, துக்ளக் உள்ளிட்ட பல்வேறு நாடகங்களில் பல்வேறு வேடங்களில் நடித்தார். மேலும், தோகி (1995) சதாசிவ் அம்ராபுர்கர் மற்றும் ரேணுகா தஃப்தார்தார், உத்தராயன் (2005), ஷெவ்ரி (2006) ரெஸ்டாரன்ட் போன்ற மராத்தி படங்களில் அவர் நடித்துள்ளார்.. உத்தரா பாக்கர் தனது நாடக […]

You May Like