fbpx

BREAKING | மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! கல்விக் கடன் தொகை ரூ.5 லட்சமாக உயர்வு..!! அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!!

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக் கடன் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமின்றி, 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களும் கல்விக் கடன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார். புத்தகக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றை ஏற்கும் வகையில் கடன் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கல்விக்கடன் உச்ச வரம்பினை ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது. கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 ஆண்டுகளுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற விதி பின்பற்றப்படும். இந்திய குடிமகன், 30 வயதுக்குட்பட்டோர் இந்த கல்விக் கடனை பெற தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அதிர வைக்கும் சாலிகிராமம் அப்பார்ட்மெண்ட் சம்பவம்..!! 15 வயது சிறுமியை இரவு முழுவதும்..!! சிக்கிய பெண் ஆடை வடிவமைப்பாளர்..!!

English Summary

Cooperatives Minister Periyakaruppan has announced that the education loan provided by cooperatives has been increased from Rs.1 lakh to Rs.5 lakh.

Chella

Next Post

"பேய்கள் குடியிருக்கும் பங்கர் கோட்டை" இரவு நேரங்களில் நடக்கும் அமானுஷ்யங்களின் திகில் பின்னணி...!

Tue Jun 11 , 2024
ராஜஸ்தாஸ்தான் மாநிலம் ஆள்வர் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலை தொடர் பகுதியில் உள்ள சரிஸ்கா என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் தான் இந்த பங்கர் என்ற கோட்டை உள்ளது. இந்த கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கேட்டையை பதினெட்டாம் நூற்றாண்டில் மன்னர் மாதோசிங் என்பவர் கட்டியுள்ளார். சுற்றுலாப் பயணிகள் யாருக்கும் இந்த கோட்டையில் மாலை ஆறு மணிக்கு மேல் இருக்க அனுமதி கிடையாது. அதேப் போல […]

You May Like