தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தான் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சேர விண்ணப்பம் செய்து வருகிறார்கள் இந்த சூழ்நிலையில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்யும் தேதி நீட்டிக்கப்பட்டதாக காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி தெரிவித்திருக்கிறது.
பாலிடெக்னிக், பிஎஸ்சி, கணிதம் உள்ளிட்டவற்றை முடித்த மாணவர்கள் பி இ, பி டெக் உள்ளிட்ட படிப்பில் நேரடியாக இரண்டாம் வருடத்தில் இணையலாம். இதற்கான விண்ணப்ப தேதி ஜூன் மாதம் 30 ஆம் தேதி அணை இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், ஜூலை ஏழாம் தேதி வரையில் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.