fbpx

ரயிலில் சொல்வோருக்கு குட் நியூஸ்..!! புதிய விதிகளை அமல்படுத்திய இந்திய ரயில்வே..!! இனி அதை நினைத்து கவலையே வேண்டாம்..!!

மூத்த குடிமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே சில புதிய விதிகளை அவர்களுக்காக உருவாக்கியுள்ளது.

பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் இதற்காக, ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​​IRCTC மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு விதியை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இது IRCTC மற்றும் பிற ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களில் கிடைக்கிறது. இதன் கீழ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

குடும்ப பயணத்தின்போது கீழ் படுக்கை

ஒரு குரும்பமே ஒன்றாக ரயிலில் பயணிக்கிறீர்கள் என்றால், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டை சீனியர் சிட்டிசன் முன்பதிவு என்ற ஆப்சனில் தனித்தனியாக முன்பதிவு செய்தால், மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், மூத்த குடிமக்கள் குடும்பத்துடன் ஒன்றாக டிக்கெட் புக் செய்யும்போது கீழ் படுக்கைகள் ரிசர்வேசனின் கீழ் கிடைப்பதில்லை.

மூத்த குடிமக்களின் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முன் அவர்களின் வயதை குறிப்பிடுவது அவசியமாகும். பண்டிகை காலங்களில் இருக்கை பெறுவது ஒரு பெரிய விஷயம். எனவே, மூத்த குடிமக்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போதெல்லாம் பயணத்திற்கு முன்பாக 15 நாட்களுக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும். ஏசி வகுப்பை விட ஸ்லீப்பர் பெட்டிகளில் அதிக இருக்கைகள் உள்ளன,

மூத்த குடிமக்களுக்கு என்னென்ன வசதிகள்..?

ரயில் பயணத்தின் போது மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளில் தள்ளுபடி கிடைக்கிறது. முன்பதிவு செய்யும் போது கீழ் பெர்த் வேண்டும் என குறிப்பிடலாம். டிக்கெட்டில் குறிப்பிடவில்லை என்றாலும், அருகில் உள்ளவர்களிடம் கேட்டு கீழ் பெர்த் பெற்றுக் கொள்ளலாம். ரயில் டிக்கெட் பரிசோதகரிடமும் கோரிக்கை வைக்கலாம்.

Read More : ”அம்மாவுக்கு உடம்பு சரியில்ல”..!! நம்பி அனுப்பிய கணவன்..!! முதலிரவு முடிந்ததும் ஓட்டம் பிடித்த மனைவி..!! அதிர்ந்துபோன குடும்பத்தார்

English Summary

Considering the convenience of senior citizens, Indian Railways has made some new rules for them.

Chella

Next Post

27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக..? கருத்துக் கணிப்புகளை நிஜமாக்கும் அமோக வெற்றி..!!

Sat Feb 8 , 2025
டெல்லியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவியது. ஆனால், பாஜக – ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டியில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவே வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளன. இதை மெய்ப்பிக்கும் வகையில், வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. […]

You May Like