fbpx

குட் நியூஸ்..!! இலவச ரேஷன் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் வேலையிழப்பு, சம்பள குறைப்பு எனக் கடும் நெருக்கடியை மக்கள் சந்தித்தனர். அப்போது, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம், 2020ஆம் ஆண்டு கொரோனா பொதுமுடக்கக் காலத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தனிநபர்களுக்கு மாதம் 5 கிலோ உணவு தானியத்தை மத்திய அரசு இலவசமாக வழங்கியது.

2013இல் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், இந்தியாவின் மக்கள் தொகையில் 67 சதவீதத்தினர் மானியத்துடன் கூடிய உணவு தானியங்களைப் பெறுவதற்கான சட்டபூர்வ உரிமையை வழங்குகிறது. இச்சட்டத்தின்படி தற்போது 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் சுமார் 81.35 கோடிப் பயனாளர்கள் பயன்பெறுவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகம் வாயிலாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு மாதம் 2.04 லட்சம் டன் அரிசியை இலவசமாக வழங்குகிறது.

இந்நிலையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டம் அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’இதுவரைக்கும் பட்ட அவமானமே போதும்’..!! இந்த சீசனே கடைசி..!! கமல் எடுத்த திடீர் முடிவு..!!

Wed Nov 29 , 2023
விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பல ட்விஸ்டுகள் அரங்கேறி வருவதால், யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும், எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனால் கமல் அதிகளவான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக, பிரதீப்பிற்கு […]

You May Like