fbpx

மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..! “சென்னை- பெங்களூரு” இனி 2 மணி நேரத்தில் செல்லலாம்..! ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் அதிவிரைவு சாலை…

சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.

இரு நகரங்களின் பயணதூரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் சென்னை – பெங்களூர் அதிவிரைவு சாலை. பொதுவாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல 6 மணி முதல் 7 மணி நேரம் வரை ஆகலாம், ஆனால் இந்த சாலை பணிகள் முழுவதும் முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையில் இருந்து 4 மணி நேரத்தில் பெங்களூருவிற்கு சென்று விடலாம் என்று தெரிவிக்கப்டுகிறது. இந்த திட்டம் ரூ.18 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்டது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இருக்கும் இந்த சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாக செல்கிறது. இந்த விரைவு சாலிகான் பாணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை ஜனவரியில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும் சென்னை – பெங்களூரு அதிவிரைவு சாலை மூலம் 2 மணி நேரத்தில் சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு சென்றுவிடலாம் என்று கூறினார். மேலும் பேசிய அவர் நாட்டின் வாகனம் பெருக்கம் காரணமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

Kathir

Next Post

அரசு திட்டங்கள், ஆவணங்களில் விரைவில் பாரத் என பெயர் தோன்றலாம்!… மத்திய அரசின் மூத்த அதிகாரி தகவல்!

Fri Sep 8 , 2023
மத்திய அரசின் நலத்திட்டங்கள், ஆவணங்கள் மற்றும் அழைப்பிதழ்களில், விரைவில், ‘பாரத்’ என்ற பெயர் தோன்றலாம்’ என, மத்திய அரசின் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம், ‘ஜி – 20’ நாடுகளின் உச்சி மாநாடு, பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில், ‘தி பிரசிடென்ட் […]

You May Like