fbpx

கூவத்தூர் விவகாரம்..!! ’இன்னும் 24 மணி நேரம் தான் டைம்’..!! அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுக்கு Trisha எச்சரிக்கை..!!

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு. இவர், அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களை பதிவு செய்தது.

இந்நிலையில், அவருக்கு நடிகை த்ரிஷா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக, 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், பிரபலமான யூடியூப் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் மன்னிப்பு கேட்கப்பட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த 4 நாட்களாக அவதூறு கருத்தினால் மன உளைச்சலில் இருப்பதாகவும், இதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் எந்தெந்த யூடியூப் சேனல்கள், பத்திரிகைகள் மற்றும் சேனல்களில் வந்ததோ அவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் நோட்டீஸில் கூறியுள்ளார். மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை மேற்கொள்ளாவிடில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வழக்கறிஞர் நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More : Aadhaar | மாணவர்களே..!! நாளை (பிப்.23) சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! எதற்கு தெரியுமா..?

Chella

Next Post

செம மாஸ்.! மார்ச் 22 சென்னையில் தொடங்கும் IPL 2024.! 17-வது சீசன் பற்றிய முழு விபரம்.!

Thu Feb 22 , 2024
உலக கிரிக்கெட்டின் திருவிழாவாக விளங்கும் ஐபிஎல்(IPL) கிரிக்கெட் தொடரின் 2024 ஆம் ஆண்டிற்கான சீசன் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வர இருக்கின்ற நாட்களில் ஐபிஎல் தொடருக்கான பகுதி நேர அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முழு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் அட்டவணை தேர்தல் கமிஷன் பாராளுமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்த பின்பு வெளியிடப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது இந்தியன் பிரிமியர் லீக் […]

You May Like