இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கென 17 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகள் 12 விடுதிகள் மாணவர்கள் விடுதியும், 5 மாணவியர்கள் விடுதியும் செயல்படுகின்றன. இதில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி விடுதிகள் உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணனவியர்களும்,அதற்குமேல் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் விடுதிகளில் சேர தகுதியுடையவர்கள் ஆவர். அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ மாணவிகளும்குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் எவ்வித ‘செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணனவியர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ /மாவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர். பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்விநிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கீ.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
