fbpx

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு விடுப்பு கிடையாது..!! மீறி எடுத்தால் ஆக்‌ஷன் தான்..!! தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளத

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தினசரி சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தற்போது கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வார ஓய்வும் எடுக்கக்கூடாது. அதையும் மீறி எடுத்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அனைத்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் தவறாமல் பணிக்கு வந்து பணி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு வார விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் வழங்க இயலாது. மேலும், பணிக்கு வராதவர்களுக்கு ஆப்ஷன் ரிப்போர்ட் அனுப்பி சட்டப்பிரிவின் மூலம் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ரயில் பயணத்தின்போது இந்த தவறை செய்துவிட்டீர்களா..? இனி கவலை வேண்டாம்..!!

Fri Oct 20 , 2023
பொதுவாக வெளியூர்களுக்கு செல்பவர்கள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். முக்கியமாக, பயண கட்டணமும் அதில் தான் குறைவாக இருக்கும். இந்த ரயில் போக்குவரத்து பயணத்தில் இறங்க வேண்டிய இடத்தை தவறவிடுவது வழக்கம் தான். இந்த பிரச்சனைக்கு தீர்வாக தான் “டெஸ்டினேஷன் அலர்ட்” எனப்படும் ஒரு புதிய சேவையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையானது ரயில் பயணிகளுக்கு ஒரு அலாரம் போல செயல்படும். பயணிகள் இறங்கும் இடத்திற்கு 20 நிமிடங்களுக்கு […]

You May Like