fbpx

Govt: ஏப்ரல் 1-ம் முதல் வெள்ளி தோறும் கட்டாயம்…! கோதுமை விற்பனையாளர்களுக்கு அதிரடி உத்தரவு…!

ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், பதுக்கல் மற்றும் நேர்மையற்ற ஊகவணிகங்களைத் தடுப்பதற்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், சங்கிலித் தொடர் போன்ற பெரிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்கள் தங்கள் கோதுமை இருப்பு நிலையை போர்ட்டலில் (https://evegoils.nic.in/wheat/login.html) 01.04.2024 முதல் அறிவிக்க வேண்டும் என்றும், பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மறு உத்தரவு வரும் வரை அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட சட்டபூர்வ நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் இருப்பை போர்ட்டலில் தவறாமலும் சரியாகவும் வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து வகை நிறுவனங்களுக்கும் கோதுமை இருப்பு வரம்பு 31.03.2024 அன்று முடிவடைகிறது. அதன்பிறகு, நிறுவனங்கள் கோதுமை கையிருப்பை போர்ட்டலில் வெளியிட வேண்டும். அனைத்து வகை நிறுவனங்களும் அரிசி கையிருப்பு அறிவிப்பு வெளியிடுவது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிறுவனமும் தங்களைப் பதிவு செய்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமை மற்றும் அரிசி கையிருப்பை வெளியிடத் தொடங்கலாம். இப்போது, சட்டபூர்வமான அனைத்து நிறுவனங்களும் தங்கள் கோதுமை மற்றும் அரிசி கையிருப்பை போர்ட்டலில் தவறாமல் அறிவிக்க வேண்டும். கோதுமை மற்றும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தவும், இவை நாட்டில் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்யவும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை கோதுமை மற்றும் அரிசி இருப்பு நிலவரத்தை கண்காணித்து வருகிறது.

Vignesh

Next Post

Election: வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்றே கடைசி நாள்!… இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை 5 மணிக்கு வெளியீடு!

Sat Mar 30 , 2024
Election: தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரி இடம்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு […]

You May Like