fbpx

கோடை சீசனுக்கு ஏற்றது திராட்சை ரசம்தான்!… அவ்வளவும் சத்து!… சுவையில் கெத்து!… டிரை பண்ணிப்பாருங்க!

திராட்சைபழங்கள் மற்றும் இதன் சாறை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!”.திராட்சை ரசத்தின் மேன்மைகளைப் பார்ப்போம். இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச்சமம். ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத்தடுக்கும். திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது!

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, 1448531720-5363இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். மஞ்சள் காமாலை இருப்பவர்கள் கொட்டையுடன் திராட்சையை அரைத்து, சாறு எடுத்து அருந்தினால், நோயின் தீவிரம் குறையும்.

ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை “டயட்”டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.”ரெஸ்வெரட்ரால் (Resveratrol)” எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம்கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. ரத்தக்குழாயில் ஏற்படும் பிரச்னைகள், வெரிகோஸ்வெயின் முதலான தொந்தரவுகளைத் தடுக்கும் ஆற்றல், திராட்சைக்கு உண்டு. திராட்சையில் உள்ள ரெஸ்வெரட்ரால் சத்து இதயம் சீராக இயங்கத் துணைபுரியும். திராட்சை ரசம் சிறந்த இதய டானிக்.

பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினைமாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது. சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும். உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தைஅருந்தி, ஆரோக்கியமாக இருங்கள்.

Kokila

Next Post

அடுத்த ஆபத்து... காலநிலை மாற்றத்தால் கொடிய நோய்கள் ஏற்படலாம்... புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

Thu Apr 13 , 2023
காலநிலை மாற்றம் என்பது தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. காலநிலை மாற்றம் நமது கிரகத்தில் தொடர்ந்து அழிவை ஏற்படுத்துவதால், தொற்று நோய்கள் பரவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. ஆம்.. கோவிட் தொற்றுநோயை மிஞ்சும் வகையில் காலநிலை மாற்றம் தொற்றுநோயாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தால் ஏறக்குறைய ஒவ்வொரு நாடும் பாதிக்கப்பட்டுள்ளன.. வளர்ந்த நாடாக இருந்தாலும் சரி,, வளரும் நாடாக இருந்தாலும் சரி, பின் தங்கிய நாடாக இருந்தாலும் காலநிலை மாற்றம் […]

You May Like